TNPSC Thervupettagam

குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா

April 27 , 2021 1512 days 672 0
  • சர்வதேச மதச் சுதந்திரத்தைக் கண்காணிக்கும் அமெரிக்க அரசு நிறுவனமானது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும் இந்தியாவினைக் குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள் பட்டியலில் (Country of Particular Concern - CPC) சேர்க்கப்  பரிந்துரை செய்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு CPC பட்டியலில் சேர்க்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ள மற்ற புதிய நாடுகள் ரஷ்யா, சிரியா மற்றும் வியட்நாம் ஆகியவையாகும்.
  • USCIRF (United States Commission on International Religious Freedom) அமைப்பினால் ஏற்கனவே CPC பட்டியலிலிருக்கும் நாடுகளுள் மறுபடியும் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்ட நாடுகள் பர்மா, சீனா, எரித்ரியா, ஈரான், நைஜீரியா, வடகொரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டில் சிறப்பு கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கியூபா மற்றும் நிகரகுவாவுடன் சேர்த்து ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, அசர்பெய்ஜான், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், கஜகஸ்தான், மலேசியா, துருக்கி மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும்சிறப்பு கண்காணிப்புப் பட்டியலில்சேர்க்கப்பட பரிந்துரைக்கப்  பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்