- ஆஸ்திரேலிய நாடானது இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பின் கீழ் ரூ. 81.2 மில்லியன் (1.4 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்) தொகையினை வழங்குவதாக அறிவித்துள்ளது.
- இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பானது (Indo – Pacific Oceans Initiative – IPOI) 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற கிழக்காசிய உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் முன்மொழியப்பட்டது.
- கடல்சார் எல்லைகளை வலுப்படுத்துவதே இம்முன்னெடுப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.
கூட்டாண்மை பற்றிய தகவல்கள்
- இந்த முன்னெடுப்பு ஒரு சுதந்திரமான மற்றும் அனைவருக்குமான வளமான ஒரு இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க ஆதரவு வழங்கும்.
- இதில் உதவித் தொகையைப் பெற விண்ணப்பிப்பதற்கு ஒரு நிறுவனம் (அ) அமைப்பானது இந்தியாவில் (அ) ஆஸ்திரேலியாவில் அமைந்திருப்பதோடு, அந்த நிறுவனம் இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் கூட்டாண்மை நிறுவனங்களைக் கொண்டிருக்க வேண்டும்.