TNPSC Thervupettagam

குலசேகரப்பட்டினம் ஏவு வளாகம்

August 31 , 2025 22 days 84 0
  • தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் உள்ள புதிய ஏவு வாகன ஏவுதளம் ஆனது, ஒவ்வோர் ஆண்டும் 20 முதல் 25 செயற்கைக்கோள் ஏவுதலைக் கையாளும்.
  • தற்போது, ​​இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தை (SDSC) இயக்குகிறது.
  • துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் (PSLV) மற்றும் புவி ஒத்திசைவு செயற்கைக் கோள் ஏவு வாகன (GSLV) செயற்கைக் கோள்கள் SDSC தளத்திலிருந்து ஏவப்படுகின்றன.
  • ஏவு திறனை அதிகரிப்பதற்காக இந்தியாவின் இரண்டாவது ஏவு வளாகம் ஆனது குலசேகரப்பட்டினத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
  • இந்தத் திட்டமானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • ஏவு வாகன ஏவுதளத்தின் கட்டுமானம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டது.
  • சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத்தினைப் (SSLV) பயன்படுத்தி ஏவு வாகனங்கள் விண்ணில் ஏவப்படும்.
  • ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள இரண்டு ஏவுதளங்கள் உள்ளன என்ற நிலையில் மூன்றாவது ஏவு தளம் SDSC தளத்தில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் கட்டுமானத்தில் உள்ளது.
  • 500 கிலோகிராம் வரை எடையுள்ள ஏவு வாகனங்கள் குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவப்படும்.
  • இஸ்ரோ மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகிய இரண்டும் புதிய தளத்திலிருந்து ஏவு வாகனங்களை ஏவும்.
  • 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவு வாகனங்களின் ஏவுதல்களைத் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்