TNPSC Thervupettagam

கூட்டுப் போர் படைப்பிரிவுகள்

July 29 , 2022 1055 days 485 0
  • ஆயுதப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தச் செய்வதற்காக முப்படைகளின் மீதான கூட்டுப் போர்ப் படைகள் அமைக்கப்பட உள்ளன.
  • இது இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய மூன்று படைகளின் திறன்களை ஒருங்கிணைக்க முயலும் ஒரு திட்டமாகும்.
  • இது அவற்றின் வள ஆதாரங்களைப் போர்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு உகந்த முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அதற்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளைப் பொறுத்து, மூன்று படைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட ஏதேனும் ஒரு படைப் பிரிவின் தலைவர் மூன்று நட்சத்திரத் தரம் உள்ள படைத் தளபதியாகச் செயல்படுவார்.
  • தற்சமயம் இந்தியாவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் படைப் பிரிவு மற்றும் யுக்தி சார் படைப் பிரிவு என்று இரண்டு கூட்டுப் படைப் பிரிவுகள் உள்ளன.
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் படைப் பிரிவு என்பது மட்டுமே நாட்டில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கின்ற இம்மாதிரியிலான அமைப்பாக கருதப் படுகின்றது.
  • 2001 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்ட இது போர்ட் பிளேயரில் ஏற்படுத்தப் பட்டது.
  • யுக்தி சார் படைப் பிரிவு என்பது இந்தியாவில் அணு ஆயுதச் சொத்துக்களை மட்டுமே கையாள்வதோடு எந்தவொரு குறிப்பிட்ட யுத்தக் களத்தினையும் கையாளச் செய்வது இல்லை. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்