2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை (அகாடமி புரஸ்கார்) பெறுபவர்களின் பெயர்களை சங்கீத நாடக அகாடமி அறிவித்து உள்ளது.
இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகள், பொம்மலாட்டம் மற்றும் உதவித்தொகை வழங்கும் நிறுவனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த மொத்தம் 108 கலைஞர்கள் இந்த கௌரவ விருதிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
விருது பெறுபவர்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர், இது இந்திய நிகழ்த்து கலை வடிவங்களின் பரந்த அளவை உள்ளடக்கியது.
சங்கீத நாடக அகாடமி விருதுகள் 1952-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன, மேலும் இது நிகழ்த்து கலைகளில் இந்தியாவின் மிக உயர்ந்த தேசிய கௌரவங்களில் ஒன்றாகும்.
நிகழ்த்து கலைத் துறையில் தொடர்ச்சியான தனிப்பட்ட சிறப்பான செயல்பாடு மற்றும் பங்களிப்பை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.
ஒவ்வொரு அகாடமி புரஸ்கார் விருதும் ஒரு தாமிரப் பட்டயத்துடன் ₹1 லட்சம் ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது.
விருது பெற்றவர்களில் இசை, நடனம், நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைகள் துறைகளைச் சேர்ந்த பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், நெய்வேலி ஆர்.நாராயணன் மற்றும் நிலாத்ரி குமார் போன்ற தலைசிறந்த கலைஞர்கள் அடங்குவர்.