2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சவூதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பிராந்தியத்தின் உட்புறப் பாலைவனப் பகுதிகளில், வரலாற்றில் முதல் முறையாகப் பனிப்பொழிவு ஏற்பட்டது.
கனமழை மற்றும் ஆலங்கட்டி மழைக்குப் பிறகு, 2025 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இந்தப் பனிப்பொழிவு நிகழ்ந்தது.
மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து நகர்ந்த ஒரு குளிர்ந்த வானிலை அமைப்பால் இந்த நிகழ்வு ஏற்பட்டது.
வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்கு நெருக்கமாக குறைந்ததால், பாலைவன மணலில் பனி படிய முடிந்தது.
அல்-ஜாவ்ஃப், அல்-நஃபூத் பாலைவனம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) அருகிலுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
தபூக் போன்ற வடக்கு மலைப்பகுதிகளில் குளிர்காலத்தில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம், ஆனால் அல்-ஜாவ்ஃப் உட்புறப் பாலைவனங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது மிகவும் அரிதானது.