இந்திய சாம்பல் நிற இருவாச்சி (ஓசிசெரோஸ் பைரோஸ்ட்ரிஸ்) 60 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தின் கிர் காடுகளுக்குத் திரும்பி, தொடர்ந்து நான்காவது ஆண்டாக வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளது.
இந்த இனம் IUCN (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) செந்நிறப் பட்டியலில் 'தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மறு அறிமுகத் திட்டம் 2021 ஆம் ஆண்டில் தொடங்கியதுடன் அப்போது குஜராத்தின் ஆரவல்லி காடுகளில் உள்ள ஆரோக்கியமான இருவாச்சி பறவைகளின் கூட்டத்தில் இருந்து 40 பறவைகள் கிர் காடுகளில் விடுவிக்கப்பட்டன.
அவற்றின் உயிர்வாழ்வு, வாழ்விடப் பயன்பாடு, நகர்வு மற்றும் இனப்பெருக்க நடத்தை ஆகியவற்றைக் கண்காணிக்க செயற்கைக்கோள் கண்காணிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டது.
இருவாச்சிப் பறவைகள் வறண்ட கலப்பு இலையுதிர் மற்றும் தேக்குக் காடுகளை விரும்புகின்றன என்பதுடன் மேலும், இவை விதை பரவல் மற்றும் காடு மீளுருவாக்கம் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.