மகாராஷ்டிரா சட்டமன்றமானது, 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சிறப்புப் பொதுப் பாதுகாப்பு மசோதாவினை நிறைவேற்றியது.
இது "இடதுசாரி தீவிரவாத அமைப்புகள் அல்லது இதே போன்றக் குழுக்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை" தடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
இது சட்ட விரோத அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு 2 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும்.
இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேச மாநிலம் மற்றும் ஒடிசாவிற்கு அடுத்தபடியாக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றும் ஐந்தாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாறும்.