செளரவ் யாதவ் வழக்கின் மூலம், செங்குத்து மற்றும் கிடைமட்ட ஆகிய இரு வகை இடஒதுக்கீடுகளுக்கிடையேயான இருதிசை தாக்கத்தின் மீது சட்டத்தின் நிலைமை குறித்த ஒரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்வழக்கில் உத்தரப் பிரதேச அரசின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
செங்குத்து இடஒதுக்கீடு என்பது பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைக் குறிக்கிறது.
கிடைமட்ட இடஒதுக்கீடு என்பது பெண்கள், முதியோர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்ற இதர வகைப் பயனாளிகளுக்கு செங்குத்து இடஒதுக்கீட்டில் வழங்கப் படும் சம வாய்ப்பைக் குறிக்கிறது.