TNPSC Thervupettagam

சென்னையில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம்

September 6 , 2026 7 days 81 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ₹1,200 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகத்தைக் கட்டும் திட்டத்தை அறிவித்தார்.
  • தற்போது, மாநிலத்தின் சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் மெரினா கடற்கரைக்கு அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன.
  • திறமையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும், அடுத்த 100 ஆண்டுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் உலகத் தரம் வாய்ந்த பொது நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், இந்த வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் இடம் பெறும்.
  • அவர் சட்டமன்றத்தில் விதி 110 என்பதின் கீழ் தாமாக முன்வந்து இந்த அறிக்கையை வெளியிட்டார்.
  • புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றை நினைவு கூர்ந்த திரு. விஜய், அதன் கட்டுமானம் 1640-ஆம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் அதன் வணிக நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொடங்கப்பட்டு 1644-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது என்றார்.
  • 1652-ஆம் ஆண்டில் மாகாண அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பிறகு, அது பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையகமாக செயல்பட்டது.
  • சுதந்திரத்திற்குப் பிறகு, அது தமிழ்நாடு அரசின் செயலகமாக தொடர்ந்து செயல் பட்டது.
  • ஏறக்குறைய 400 ஆண்டுகளாக, இது மாநிலத்தின் நிர்வாக மையமாகவும், அதன் ஆளுகை பாரம்பரியத்தின் சின்னமாகவும் விளங்கி வருகிறது.
  • 107 ஏக்கர் பரப்பளவுள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், சுமார் நான்கு ஏக்கர் மட்டுமே செயலகத்தால் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
  • மீதமுள்ள பகுதி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் இருப்பதால், வளாகத்தை விரிவுபடுத்தவோ அல்லது மேம்படுத்தவோ முடியவில்லை.
  • தற்போது, செயலகம் இரண்டு கட்டிடங்களில் இருந்து செயல்படுகிறது என்ற நிலையில் பிரதான செயலகக் கட்டிடம் என்று அறியப்படும் புனித ஜார்ஜ் கோட்டை, முதலில் ஆளுநரின் இல்லமாகக் கட்டப்பட்டது.
  • தற்போது இதில் சட்டமன்றம், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளரின் அலுவலகங்கள், நிதித் துறை மற்றும் பிற முக்கியத் துறைகள் அமைந்துள்ளன.
  • இந்த வளாகம் 2.07 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • மாநில அரசின் விரிவடைந்து வரும் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நாமக்கல் கவிஞர் மாளிகை 1978-ஆம் ஆண்டில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன், 3.75 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது.
  • பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், அத்துடன் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தக் கட்டிடங்களில் பணியாற்றுகின்றனர்.
  • மேலும், புனித ஜார்ஜ் கோட்டைக்குள் மீதமுள்ள பகுதிகள் பாதுகாப்பு மற்றும் இந்திய தொல்லியல் துறை (ASI) நிலமாக இருப்பதால், கூடுதல் கட்டிடங்களைக் கட்டவோ அல்லது மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவோ முடியாது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்