2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 அன்று சரத்து 370 நீக்கப் பட்டதற்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும்.
பரூக் அப்துல்லா தலைமையிலான குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி இத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 280 இடங்களில், இந்தக் கூட்டணியானது 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அதே சமயம் பிஜேபி ஆனது 75 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
குப்கார் கூட்டணியானது தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 6 பிராந்தியக் கட்சிகளை உள்ளடக்கியதாகும்.