ஜல் ஜீவன் திட்டம் – முதல் தவணை
May 20 , 2021
1517 days
824
- ஜல் ஜீவன் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசானது 5,968 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
- இந்த நிதியானது 15 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இது 2021-22 ஆம் ஆண்டில் வெளியிடப்பட உள்ள நான்கு தவணைகளில் முதல் தவணையாகும்.
- 2021 ஆம் ஆண்டில் இந்திய அரசானது தனது நிதிநிலை அறிக்கையில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக 50,011 கோடி ரூபாயை ஒதுக்கியது.
- ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில்
- 93 சதவீதமானது குடிநீர் வழங்கும் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்கப் பயன்படுத்தப்படும்.
- 2 சதவீதமானது நீரின் தர ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.
- மற்றும் 5 சதவீதமானது அது சார்ந்த வேறு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப் படும்.

Post Views:
824