TNPSC Thervupettagam
August 26 , 2026 10 hrs 0 min 44 0
  • சமீபத்தில் ஏவுதல்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜிசாட்-1A (புவிசார் படமெடுக்கும் செயற்கைக்கோள்-1A) செயற்கைக் கோளை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட GSLV-F10 (புவி-ஒத்திசைவு செயற்கைக் கோள் ஏவு வாகனம்-F10) திட்டத்தின் போது இழக்கப்பட்ட EOS-03 (புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-03) எனப்படும் ஜிசாட்-1 செயற்கைக்கோளுக்கு மாற்றாக ஜிசாட்-1A செயல்படும்.
  • வால்வு கசிவு காரணமாக திரவ-ஹைட்ரஜனின் அழுத்தம் குறைந்ததால், கிரையோ ஜெனிக் மேல் நிலை இயங்காமல் போனதன் காரணமாக 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட அத்திட்டம் தோல்வியடைந்தது.
  • ஜிசாட்-1A செயற்கைக்கோள் GSLV Mk-II  (புவி-ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவு வாகனம் மார்க்-II) மூலம் ஏவப்பட உள்ளது. மேலும் இது வெள்ளம், புயல், விவசாயம் மற்றும் காடுகளைக் கண்காணிப்பதற்காக இந்தியாவின் பரந்த அளவிலான பகுதிகளைக் கண்காணித்து தகவல்களை வழங்கும்.
  • ஏவுகலக் கருவியின் நம்பகத்தன்மை, சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துதல் மற்றும் புகைப்படம் எடுக்கும் செயல்திறன் ஆகியவற்றை இத்திட்டம் சோதிப்பதுடன் NavIC (இந்திய விண்மீன் தொகுதியைக் கொண்டு வழிச்செலுத்துதல்) அமைப்புக்காக திட்டமிடப்பட்டுள்ள NVS-03 (வழிச்செலுத்தல் செயற்கைக்கோள்-03) திட்டத்திற்கு முன்னதாக இது ஒரு முக்கியமான திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்