கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் டயோஸ்கோரியா பாலகிருஷ்ணானி என்ற புதிய கிழங்கு இனம் அடையாளம் காணப் பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் வகைபிரித்தலுக்கு டாக்டர் பாலகிருஷ்ணன் அளித்தப் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்தப் பெயரிடப் பட்டுள்ளது.
இந்தக் கிழங்கு வகையானது காட்டுநாயக்கர் பழங்குடியினச் சமூகத்தினரிடையே உள்ளூரில் சோழ கிழங்கு என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் புதிய இனம் ஆனது டயோஸ்கோரியாசியே குடும்பத்தின் கீழான் டயோஸ்கோரியா இனத்தைச் சேர்ந்தது.
இது வயநாடு பகுதியில் உள்ள பசுமையான காடுகளின் சோலைகளில் மட்டுமே காணப் படுகிறது.