இந்நிகழ்ச்சித் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு நிறுவனமான தேசிய தகவல் மையத்தால் நடத்தப் பட்டது.
டிஜிட்டல் இந்தியா விருதுகளானது இந்தியாவின் தேசியத் தரவு தளம் என்ற அமைப்பின் கீழ் நிறுவப் பட்டது.
இதன் நோக்கம் "அரசாங்க சேவை விநியோகத்தை டிஜிட்டல் முறையில் மாற்றப் படுவதை" ஊக்குவிப்பதாகும்.
இந்த விருதுகளை வெல்ல மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் ‘வெளிநாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்கள்’ மட்டுமே தகுதியானவை ஆகும்.
இந்த ஆண்டின் பதிப்பில் இரண்டு புதிய பிரிவுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அவை,
கொள்ளை நோய்க் காலத்தில் புத்தாக்கம் மற்றும்
முன்மாதிரியான தயாரிப்புகள் பிரிவில் விருதுகள் என்பவையாகும்.
2020 ஆம் ஆண்டின் டிஜிட்டல் இந்தியா விருதில் ஹரியானா தனது மின்-ஆளுமை முயற்சிகளுக்காக முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
மின்-ஆளுமை முயற்சிகளில் தமிழகம் இரண்டாவது இடத்திலும், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
மாநிலம்/ஒன்றியப் பிரதேசத்தில் டிஜிட்டல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குதல் என்ற பிரிவில் தமிழகம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
தபால் துறையானது தங்கப் பதக்கத்தையும், நீதித்துறையின் கீழ் உள்ள இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் மின்னணு-குழுவானது அமைச்சகம்/துறையினுள் சிறந்த டிஜிட்டல் ஆளுமைப் பிரிவில் பிளாட்டினம் பதக்கத்தையும் வென்றுள்ளது.
சிறந்த டிஜிட்டல் ஆளுமைப் பிரிவில் ஹரியானாவானது பிளாட்டினப் பதக்கத்தையும் உத்தரப் பிரதேசம் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
கொள்ளை நோய்க் காலத்தில் புத்தாக்கம் என்ற பிரிவில் பீகார் மாநிலம் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.