தமிழ்நாடு சிறைச்சாலைகள் (இடைவிடுப்பு) விதிகள், 2026
February 22 , 2026 12 hrs 0 min 25 0
மாநில அரசு, தண்டனை பெற்றவர்களுக்கு இடைவிடுப்பு அளிப்பதற்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது.
புதிய விதிகளின் கீழ், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் தேசத் துரோகச் செயல்களுக்காக தண்டனை பெற்ற கைதிகள் விடுப்பில் செல்ல தகுதியற்றவர்கள்.
பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற வெளிநாட்டு கைதிகள் விடுப்பில் செல்ல தகுதியற்றவர்கள்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டம், 2012 இன் கீழ் தண்டனை பெற்ற கைதிகள் விடுப்பில் செல்ல தகுதியற்றவர்கள்.
போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் (NDPS) சட்டம், 1985 இன் பிரிவுகள் 19, 20(ii)(c), 21(c), 22(c), 23(c), 24, மற்றும் 27A இன் கீழ் தண்டனை பெற்ற கைதிகள் விடுப்பில் செல்ல தகுதியற்றவர்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தாக்குதல், எழுச்சி, கலகம், கிளர்ச்சி மற்றும் தப்பிச் செல்வது போன்ற சிறைக் குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் விடுப்புக்குத் தகுதி அற்றவர்கள்.
எந்தவொரு தண்டனைக் கைதியும் இடைவிடுப்பு பெறுவதை ஒரு உரிமையாகக் கோர முடியாது என்று விதிகள் கூறுகின்றன.
ஒரு தண்டனைக் கைதி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை திருப்திகரமான நடத்தையுடன் முடித்த பின்னரே இடைவிடுப்புக்கு தகுதி பெறுகிறார்.
குற்றத்தின் தன்மை, கடந்த கால குற்றப் பதிவு, சிறையில் நடத்தை மற்றும் முந்தையத் தற்காலிக விடுதலையின் போது இணக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் விடுப்புக்கான தகுதி தனித்தனியாக மதிப்பிடப்படும்.
சிறைச்சாலைகள் பொது இயக்குநர் ஒரு வருடத்தில் 60 நாட்களுக்கு மிகாமல் இடை விடுப்பு வழங்கலாம்.
மறுவாழ்வு காரணங்களுக்காக மாநில அரசு ஒரு வருடத்தில் கூடுதலாக 60 நாட்கள் விடுப்பை அனுமதிக்கலாம் என்பதோடு அதை எழுத்துப் பூர்வமாகவும் பதிவு செய்ய வேண்டும்.
விடுப்பில் செலவிடப்பட்ட காலம் குற்றவாளியின் தண்டனைக் காலத்துடன் சேர்த்து கணக்கிடப் படும்.
தண்டனைக் காலத்தை ரத்து செய்தல், முன்கூட்டியே விடுதலை செய்தல் மற்றும் பொருந்தக்கூடிய இடங்களில் பிற சட்டப்பூர்வச் சலுகைகளுக்கு விடுப்பு காலம் கணக்கிடப் படும்.
விடுப்புக் காலத்தின் போது தண்டனைக் கைதி காவல்துறை அல்லது நன்னடத்தை அதிகாரிகளின் மேற்பார்வையில் இருப்பார்.
பொது இயக்குநர் அல்லது அரசாங்கத்தால் எந்த நேரத்திலும் இடைவிடுப்பு ரத்து செய்யப் படலாம்.
கூடுதல் விடுப்பு எடுத்தல் அல்லது நிபந்தனைகளை மீறுதல் ஏற்பட்டால், கைதி பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படலாம் மற்றும் எதிர்காலத்தில் இடைவிடுப்பு மறுக்கப் படலாம்.
நோய்கள், முதுமை அல்லது பிற பதிவு செய்யப்பட்ட காரணங்களுக்காக அரசாங்கம் எந்தவொரு நபருக்கும் இந்த விதிகளின் விதிகளிலிருந்து விலக்கு அளிக்கலாம்.