காவிரி ஆற்று நீர் பற்றாக்குறை காரணமாகத் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் குறைந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூலை 27 நிலவரப்படி, குறுவை சாகுபடி 3.87 லட்சம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.05 லட்சம் ஏக்கராக இருந்தது.
தஞ்சாவூர் அதிக சாகுபடி பரப்பளவை (1.29 லட்சம் ஏக்கர்) பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை (97,000 ஏக்கர்) மற்றும் திருவாரூர் (88,700 ஏக்கர்) உள்ளன.
ஜூன் 1 முதல் ஜூலை 28 வரைத் தமிழ்நாடு 3.57 ஆயிரம் மில்லியன் கன அடி (டிஎம்சி) காவிரி நீரை மட்டுமே பெற்றுள்ளது, இதன் விளைவாக சுமார் 34 டிஎம்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நீர்வரத்து மேம்படாவிட்டால், சம்பா-தாளடி நெல் சாகுபடி அதன் வழக்கமான 12 லட்சம் ஏக்கரில் பாதியளவிற்கும் குறைவாகவே இருக்கக்கூடும்.