TNPSC Thervupettagam

திம்புவில் புத்தர் நினைவுச் சின்னங்களின் கண்காட்சி

November 19 , 2025 2 days 26 0
  • பூடானின் திம்புவில் உள்ள தாஷிச்சோட்சோங்கின் கிராண்ட் குயென்ரியில் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
  • இந்த கண்காட்சியில் சர்வதேசப் புத்த கூட்டமைப்பு (IBC) நிர்வகிக்கும் மூன்று கருத்துரு சார் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
  • முதல் கண்காட்சி இந்தியாவில் 'மகத்தான குரு' என அழைக்கப்படும் குரு பத்ம சாம்பவாவின் வாழ்க்கை மற்றும் புனித தளங்களைக் காட்டுகிறது.
  • இரண்டாவது கண்காட்சி, புத்தர் நினைவுச் சின்னங்களின் அகழ்வாராய்ச்சி மற்றும் முக்கியத்துவம் உட்பட, சாக்கியர்களின் புனித மரபுகளை வெளிக் கொணர்கிறது.
  • மூன்றாவது கண்காட்சியானது புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை முன் வைக்கிறது.
  • இந்தக் கண்காட்சி பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்கின் 70வது பிறந்த நாளுடன் ஒன்றி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்