பிணவறை மற்றும் பிரேதப் பரிசோதனை உள்கட்டமைப்பிற்கான தனது முதல் சீரான தேசியத் தரநிலைகளை இந்தியா இறுதி செய்துள்ளது.
சுகாதாரச் சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் (DGHS) கீழ் செயல்படும் மருத்துவ நிறுவனங்களுக்கான தேசிய சபை மூலம் மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இந்தத் தரநிலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிணவறைகள் தரை தளத்தில், மருத்துவக் கழிவுப் பகுதிகளிலிருந்து தள்ளி, உடல்களைக் கொண்டு செல்வதற்கு என தனி நுழைவு வாயில்களுடன் இருக்க வேண்டும்.
குளிர்பதனக் கிடங்கு 4°C முதல் 8°C வரை பராமரிக்கப்பட வேண்டும், மேலும் குறைந்த பட்சம் நான்கு உடல்களை வைக்கும் திறனும், அடையாளம் காண தனித்துவமான வரிசை எண்களும் இருக்க வேண்டும்.
மருத்துவ-சட்ட வழக்குகளின் உடல்கள் மற்ற உடல்களிலிருந்து தனியாக பாதுகாக்கப் பட வேண்டும்.