நிதி ஆயோக் மற்றும் உலக வளங்கள் நிறுவனம் (WRI) ஆகிய இரண்டும் இணைந்து, E-FAST இந்தியா எனப்படும் இந்தியாவின் முதல் தேசிய மின்சாரச் சரக்குத் தளத்தினை அறிமுகப் படுத்தியது.
E-FAST இந்தியா என்பது நிலையானப் போக்குவரத்து வசதி கொண்ட இந்தியாவிற்கான மின்சாரச் சரக்கு விரைவாக்கி என்பதனைக் குறிக்கிறது.
இந்தத் தளமானது, தரைவழி விளக்க முன்னோட்டம் மற்றும் ஆதாரம் அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் மேம்படுத்தப்பட்ட சரக்கு மின்மயமாக்கல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகப் பொருளாதார மன்றம், CALSTART மற்றும் RMI இந்தியாஅமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் இந்தத் தளம் பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது.