தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வை இந்தியத் தேர்தல் ஆணையம் நிறைவு செய்துள்ளதோடு இதில் மறு வாக்குப் பதிவுக்கான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
படிவம் 17A (வாக்காளர்களின் பதிவு) மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்களின் ஆய்வு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளையும், மேற்கு வங்கத்தில் உள்ள 152 தொகுதிகளையும் உள்ளடக்கியது.
பார்வையாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கு வங்கத்தில் 44,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளும், தமிழ்நாட்டில் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளும் சரிபார்க்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் (VVPAT) ஆகியவை கடுமையான கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.