2017 ஆம் ஆண்டில் தோல்கா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக கட்சியின் அமைச்சரான பூபேந்திரசின்ஹ் சுடசாமாவின் தேர்தல் வெற்றியை “முறைகேடு மற்றும் மோசடி செய்தல்” என்பதின் அடிப்படையில் செல்லாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையமானது தோல்கா சட்டமன்றத் தொகுதி தொடர்பான தேர்தல் மனு மீதான குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக உமேஷ் சின்ஹாவின் தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.