TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டு இலக்கு செயல்திறனில் தமிழ்நாடு மற்றும் ஐரோப்பா

June 13 , 2025 2 days 65 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
  • நிதி ஆயோக் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, இது தற்போது பல ஐரோப்பிய நாடுகளின் சராசரியை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
  • 2023–24 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் SDG குறியீட்டில், தமிழ்நாடு 78 புள்ளிகளைப் பெற்றது, இது 2018 ஆம் ஆண்டில் 66 ஆக இருந்தது.
  • இதன் மூலம் மாநிலம் இந்திய அளவில் கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 17 SDG இலக்குகளுள் 13 இலக்குகளில் தமிழ்நாடு 'முன்னணி' அந்தஸ்தைப் பெற்றது.
  • வறுமை மற்றும் பட்டினி நிலையை ஒழித்தல், நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி, தூய்மையான எரிசக்தி மற்றும் முறையான வேலைவாய்ப்புகள் போன்ற துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • பருவநிலை மாற்றத்தினைக் கையாள்வதில் வலுவான முயற்சிகளை மேற்கொண்டு, பருவநிலை நடவடிக்கையிலும் இந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • அதன் மதிப்பெண் ஆனது, சுமார் 72% ஆக உள்ள பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சராசரி SDG மதிப்பெண்ணை விட அதிகமாக உள்ளது.
  • மாநில திட்டக் குழுவானது, நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்குத் திட்டம் என்ற அறிக்கையினைச் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் தீவிர வறுமை நிலையை ஒழித்து, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கையினைப் பூஜ்ஜியமாகக் குறைப்பதை இது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்