மேட்டூர் அணையின் 92 ஆண்டுகள் கால வரலாற்றில், இந்த ஆண்டு டெல்டா பகுதியின் பாசனத்திற்காக அதன் வழக்கமான தேதியான ஜூன் 12 ஆம் தேதியன்று தண்ணீர் திறக்கப் படுவது இது 20வது முறையாகும்.
கடந்த 61 ஆண்டுகளில், திட்டமிடப்பட்ட தேதிக்குப் பிறகு தண்ணீர் திறக்கப் பட்டது என்ற அதே சமயம் கடந்த 11 ஆண்டுகளில், இந்த அணையானது சரியான நேரத்தில் திறக்கப் படவும் இல்லை.
டெல்டா பகுதியில் ஜூன் 12 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை குறுவை சாகுபடிக்காக 5.22 லட்சம் ஏக்கருக்கு என்று மொத்தம் 135.52 TMC தண்ணீர் தேவைப் படுகிறது.
செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை, சம்பா மற்றும் தாளடிச் சாகுபடிக்கு, 12.10 லட்சம் ஏக்கருக்கு 268.47 TMC தண்ணீர் தேவைப் படுகிறது.
இதில் நீர் திறப்பு ஆனது 460 மெகாவாட் நீர் மின் உற்பத்திக்கும் உதவும்.
இது அடிப்படையில் கொள்ளிடத்தில் உள்ள அணைக் கரையில் இருந்து பிரியும் வடவாறு என்ற கால்வாய் வழியாக காவிரி நீர் மூலம் நீரைப் பெறுகின்ற வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரைப் பெறுகின்ற சென்னையின் குடிநீர்த் தேவைகளுக்கும் மிக அவசியமாகும்.
2024 ஆம் ஆண்டில், ஜூன் மாதத்தில் அணை திறக்கப் படவில்லை என்பதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் தேதி தவற விடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
அணை திறக்கும் தேதி கடைசியாக தவற விடப்பட்டது 2019 ஆம் ஆண்டில் தான் ஆகும்.
அணையின் கொள்ளளவு 120 அடி மற்றும் சேமிப்பு நிலை 93.47 TMC ஆக இருக்கும்.