சென்னை உயர் நீதிமன்றம் எந்தவொரு மதம் அல்லது சாதி கொண்டும் அடையாளம் காணப்பட விரும்பாத நபர்களுக்கு ‘சாதி, சமூகப் பிரிவு அற்றவர்’ என்ற வகையில் சான்றிதழ்களை வழங்க வருவாய் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு அரசு உத்தரவை (G.O.) பிறப்பிக்குமாறு தமிழக அரசைக் கோரியுள்ளது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், வருவாய் அதிகாரிகளுக்கு அத்தகைய வகையிலானச் சான்றிதழை வழங்குவதற்கு அதிகாரம் இல்லாததால், விண்ணப்பதாரருக்கு ‘சாதி, சமூகப் பிரிவு அற்றவர்’ என்ற சான்றிதழை வழங்குமாறு திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 05 ஆம் தேதியன்று திருப்பத்தூர் தாசில்தார், 2022 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதியன்று கோயம்புத்தூர் தாசில்தார் மற்றும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று அம்பத்தூர் தாசில்தாரால் ‘சாதி, சமூகப் பிரிவு அற்றவர்’ போன்ற சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன.