காவிரி டெல்டாவில் காணப்படும் ஆற்று நீர்நாய்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
மென் தோல் கொண்ட ஆற்று நீர்நாய்கள் ஆசியாவின் மிகப்பெரிய நீர்நாய் இனங்கள் ஆகும் என்பதோடு இவை IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த இனம் இந்தியாவின் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
இந்த முன்னெடுப்பு 2025–26 ஆம் ஆண்டிற்காக 20 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தத் திட்டம் நீர்நாய்களின் எண்ணிக்கையை கணக்கிடுதல், வாழ்விடங்களை மீட்டு எடுப்பது மற்றும் மனித-நீர்நாய் மோதல்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.