கோவையில் செம்மொழிப் பூங்காவிற்கு அருகில் காந்திபுரத்தில் ஒரு நீலகிரி வரையாடு தகவல் பரப்பு மையம் நிறுவப்படும்.
கடந்த ஆண்டு, தமிழ்நாடு மாநிலத்தில் 13 வழித் தடங்கள் மற்றும் 140 இடங்களில் நடத்தப் பட்ட கணக்கெடுப்பின் போது 1,031 நீலகிரி வரையாடுகள் பதிவு செய்யப் பட்டன.
இந்த ஆண்டு, 14 வாழ்விடங்கள் மற்றும் 175 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 1,303 நீலகிரி வரையாடுகள் பதிவு செய்யப்பட்டன என்ற நிலையில் இது 272 என்ற அதிகரிப்பைக் காட்டுகிறது.
ஆனைமலை புல் மலைகளில் தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக 334 நீலகிரி வரையாடுகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் 1,352 நீலகிரி வரையாடுகளும் பதிவாகியுள்ளது என்பதோடுஇது தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கான ஒருங்கிணைந்த மொத்த எண்ணிக்கையை 2,655 ஆக உயர்த்தியது.