புகழ்பெற்ற இந்துஸ்தானி செவ்வியல் கலைப் பாடகரும் தும்ரி நிபுணருமான பண்டிட் சான்னுலால் மிஸ்ரா காலமானார்.
1936 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் பிறந்த இவர், கிரணா கரானாவின் உஸ்தாத் அப்துல் கனி கானின் கீழ் பயிற்சி பெற்றார்.
அவர் ஆன்மீக ரீதியான ஆத்மார்த்தமான பாடல்களுக்குப் புகழ் பெற்றவர் ஆவார்.
வாரணாசியின் இசைப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அவர் கிரானா மற்றும் பனாரஸ் கரானா இசைப் பாணிகளை இணைத்தார்.
சான்னுலால் மிஸ்ராவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது மற்றும் ஆவாதி, பிரிஜ் பாஷா, உருது மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் பக்தி இசைக்காகப் புகழ் பெற்றவர் இவர் ஆவார்.