பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியன இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.
இது நிதி ஆயோக்கின் முதலாவது பல்பரிமாண வறுமை குறியீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பீகாரில் வாழும் 51.91 சதவீதத்தினர் ஏழ்மையானவர்கள் என இந்த அறிக்கை கூறுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் (42.16%), மற்றும் உத்தரப் பிரதேசம் (37.79%) ஆகியவை உள்ளன.
ஏழ்மையில் முதலில் உள்ள 5 மாநிலங்கள் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகியனவாகும்.
அதே சமயத்தில் கேரளா (0.71 சதவிகிதம்), கோவா (3.76 சதவிகிதம்), சிக்கிம் (3.82 சதவிகிதம்), தமிழ்நாடு (4.89 சதவிகிதம்) மற்றும் பஞ்சாப் (5.59 சதவிகிதம்) ஆகிய மாநிலங்கள் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஏழ்மை குறைவாக உள்ள 5 மாநிலங்கள் ஆகும்.
இந்தக் குறியீட்டின் படி நாடு முழுவதும் சுழிய அளவில் வறுமையினைப் பதிவு செய்த ஒரே மாவட்டம் கேரளாவின் கோட்டயம் ஆகும்.
பீகார் மாநிலம் அதிக ஊட்டச்சத்துக் குறைபாட்டினைக் கொண்டுள்ள மக்களைக் கொண்ட ஒரு மாநிலமாகவும் உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை உள்ளன.