TNPSC Thervupettagam

முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரா யோஜனா

November 30 , 2021 1366 days 615 0
  • டெல்லி  அரசானது பாகிஸ்தானிலுள்ள கர்தாபூர் சாஹிப் மற்றும் தமிழ் நாட்டிலுள்ள வேளாங்கண்ணி தேவாலயம் ஆகியவற்றை ‘முக்கிய மந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா என்ற தனது யாத்திரைத் திட்டத்தில் சேர்ப்பதாக அறிவித்தது.
  • ஏற்கனவே உள்ள 13 யாத்திரை வழித்தடங்களைத் தவிர, அதில் மேலும் இரண்டு வழித் தடங்களைச் சேர்ப்பதற்கு டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
  • அந்த இரண்டு வழித்தடங்களாவன : டெல்லி-வேளாங்கண்ணி-டெல்லி மற்றும் டெல்லி-கர்தாபூர் சாகிப்-டெல்லி ஆகும்.
  • பக்தர்கள் டெல்லி-வேளாங்கண்ணி-டெல்லி வழித்தடத்தில் AC-III என்ற ஒரு இரயில் பெட்டியில் பயணிப்பர்.
  • கர்தாபூர் சாகிப் பகுதிக்கு, பயணிகள் குளிர்சாதன வசதி பெற்ற ஒரு பேருந்தில் பயணிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்