TNPSC Thervupettagam

பழைய வாகனங்களை அழிப்பதற்கான கொள்கை

March 20 , 2021 1584 days 619 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் பழைய வாகனங்களை அழிப்பதற்கான கொள்கையினை 2021 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
  • இக்கொள்கை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரும்.
  • இக்கொள்கையானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினைச் சமர்ப்பிக்கும் போது அவர் ஆற்றிய உரையில் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது.

குறிப்பு

  • 20 வருடங்களுக்கும் மேலான பழைய 51 லட்சம் மற்றும் அதற்கும் மேற்பட்ட இலகுரக மோட்டார் வாகனங்கள் இக்கொள்கையின் கீழ் அகற்றப்படும்.
  • 34 லட்சம் இலகுரக மோட்டார் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலானவை. மேலும் 51 லட்சம் இலகுரக மோட்டார் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலானவை.
  • 17 லட்சம் நடுத்தர மற்றும் கனரக வணிகத்திற்குப் பயன்படும் வாகனங்கள் 15 வருடங்களுக்கும் மேலானவை ஆகும்.

சிறப்பம்சங்கள்

  • இக்கொள்கை, வாகனங்கள் வெளியிடும் மாசுப் பொருட்களைக் குறைப்பதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும்.
  • இக்கொள்கையானது தரம் குறைந்த, பழைய மற்றும் மாசுபடுத்தும் வாகனங்கள் இல்லாத ஒரு சூழலை உருவாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இக்கொள்கையின் கீழ், 20 வருடங்களுக்குப் பிறகு சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தப் படும் வாகனங்கள் ஆட்டோமொபைல் மையங்களில் தரநிர்ணய சோதனைக்கு உட்படுத்தப்படும்.
  • 15 வருடங்களுக்குப் பிறகு வணிகத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் தரநிர்ணயச் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
  • ஒரு வாகனம் மூன்று முறை தரநிர்ணய சோதனையில் தகுதி பெறவில்லையெனில் அதன் உரிமையாளர் அந்த வாகனத்தை சாலையில் பயணிக்க உபயோகிக்கக் கூடாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்