புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் இந்திய வானிலை ஆய்வுத் துறையானது (IMD) பாரத் முன்னறிவிப்பு/ முன்னெச்சரிக்கை அமைப்பை (BFS) ஏற்றுள்ளது.
இது 6 கிலோமீட்டர் வரையிலான தெளிவுத்திறன் கட்டமைப்பினைக் கொண்டிருக்கும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பு மாதிரியாகும்.
இது 6 கிலோ மீட்டர் வரையில் மிக நுண்ணிய இடஞ்சார்ந்த தெளிவுத் திறனில் அதி-துல்லிய முன்னறிவிப்புகளை வழங்குகிறது.
இது இந்தியாவினை ஐக்கியப் பேரரசு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அதன் சக உலக நாடுகளை விட முன்னிலைப்படுத்துகிறது.
அவற்றின் மாதிரிகள் மிகவும் பொதுவாக 9 முதல் 14 கிலோ மீட்டர் தெளிவுத்திறனில் இயங்குகின்றன.
இந்த மேம்படுத்தப்பட்ட முன்னறிவிப்பு அமைப்பு ஆனது, உயர் செயல்திறன் கொண்ட கணினி அமைப்புகளான 'அர்கா' மற்றும் 'அருணிகா' ஆகியவற்றின் பெரு ஆதரவுடன் செயல்படுகிறது.