2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, இந்தியப் பிரதமர் புது தில்லியில் உள்ள செங்கோட்டையிலிருந்து 74வது சுதந்திர தினத்தின் போது புதிய திட்டங்களை அறிவித்தார்.
இது அவரது தொடர்ச்சியான 7வது சுதந்திர தின உரையாகும். இவரது உரையானது ஆத்ம நிர்பர் பாரத் (தற்சார்பு இந்தியா), உள்ளூர் மக்களுக்கான குரல் மற்றும் உலகிற்கு தயாரிப்பதற்காக வேண்டி இந்தியாவில் தயாரிப்போம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.
அறிவிப்புகள்
தனிநபர்களின் மருத்துவப் பதிவுகளைப் பதிவு செய்யும் வகையில் ஒவ்வொரு இந்தியரும் சுகாதார அடையாள அட்டையைப் பெறுவதற்கான தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தைத் தொடங்குதல்.
லட்சத் தீவுகள் மற்றும் இந்திய நிலப்பகுதியை இணைக்கக் கூடிய ஒளியிழை இணைப்பு.
மேலும் இவர் புலிகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்ற வரிசையில் “ஓங்கில் பாதுகாப்புத் திட்டத்தை” அறிவித்தார்.
மத்திய அரசானது பெண்களின் திருமணத்திற்கான குறைந்த பட்ச வயதை மறு ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைத்தார்.
லடாக், லேஹ் மற்றும் கார்கில் பகுதி ஆகியவை மேம்படுத்தப்பட்டு, கரிம சமநிலைப் பகுதியாக அவை அறிவிக்கப்படும்.