மகாராஷ்டிராவின் கொங்கன் கடற்கரையில் உள்ள அலைகளுக்கிடையேயான படிவுகளில் சாம்போபாகா ஹோல்ஸ்மேனே (Psammophaga holzmannae) மற்றும் சாம்போபாகா சின்ஹாய் (Psammophaga sinhai) என்ற இரண்டு புதிய நுண்ணிய கடல்வாழ் உயிரினங்களை புனேயைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
அவை சாம்போபாகா என்ற பேரினத்தைச் சேர்ந்த ஒருசெல் கடல்வாழ் புரோட்டிஸ்டுகள் ஆகும், இது பென்திக் ஃபோராமினிஃபெரா குழுவைச் சேர்ந்தது.
அவை நுண்துகள்களை உட்கொண்டு, மணல் துகள்களை ஒன்றாகச் சேர்த்து சோதனைகள் (tests) எனப்படும் பாதுகாப்பான ஓடு போன்ற அமைப்புகளை உருவாக்குகின்றன.
ஃபோராமினிஃபெரா ஆழமற்ற அலைகளுக்கிடையேயான பகுதிகள் முதல் ஆழமான கடல் அகழிகள் வரை காணப்படுகின்றன, மேலும் அவை உப்புத்தன்மை, வெப்பநிலை, கன உலோகங்கள் மற்றும் பெருங்கடல் அமிலமயமாக்கல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கக் கூடியவை.
அவற்றின் புதைபடிவ ஓடுகள் கடந்தகால கடல் வெப்பநிலை மற்றும் கடல் மட்ட மாற்றங்களை மறுகட்டமைக்கவும் பயன்படுத்தப் படுகின்றன.