TNPSC Thervupettagam

போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டம்

July 10 , 2026 20 days 111 0
  • போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்கவும், மறுவாழ்வை ஊக்குவிக்கவும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டத்தை (NAPDDR) தொடங்கியுள்ளது.
  • இக்கட்டமைப்பு தடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திறன் மேம்பாடு, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • 2019 ஆம் ஆண்டு தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • அமைச்சகமானது தனது போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு வலையமைப்பை நாடு முழுவதும் 768 மையங்களாக விரிவுபடுத்தியுள்ளது.
  • போதை மீட்புக்கான கட்டணமில்லா உதவி எண் 14446 ஆதரவை வழங்கும் அதே வேளையில் நஷா முக்த் பாரத் அபியான் விழிப்புணர்வையும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவையும் ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்