TNPSC Thervupettagam

மகப்பேறு கால காயத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 2026 - மே 23

May 28 , 2026 2 days 39 0
  • பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதிக்கும், தடுக்கக்கூடிய பிரசவ கால காயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே 23 அன்று மகப்பேறு கால காயத்தை (Obstetric Fistula) ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மகப்பேறு கால ஃபிஸ்டுலா என்பது உரிய நேரத்திலான மருத்துவ சிகிச்சையின்றி, நீண்ட நேர அல்லது தடைபட்ட பிரசவத்தினால் ஏற்படும் ஒரு தீவிரமான பிரசவ கால காயம் ஆகும்.
  • இந்நிலை சிறுநீர் அல்லது மலக் கசிவு, நோய்த்தொற்றுகள், உணர்ச்சிப்பூர்வமான அதிர்ச்சி, சமூக தனிமைப்படுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
  • ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 முதல் 100,000 புதிய மகப்பேறு ஃபிஸ்டுலா பாதிப்புகள் ஏற்படுகின்றன, அவற்றில் பல பாதிப்புகள் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் பதிவாகின்றன.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Restore Her Dignity. Protect Her Future” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்