சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகமானது, கோவாவில் மக்களுக்கான பல்லுயிர்த்தன்மைப் பதிவேட்டினைப் புதுப்பித்தல் மற்றும் அதனைச் சரி பார்த்தலுக்கான தேசியப் பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
விரிவான மக்களுக்கான பல்லுயிர்த்தன்மை பதிவேட்டினை உருவாக்கிய இந்தியாவின் முதல் பெரிய பெருநகரமாக கொல்கத்தா மாறியுள்ளது.
இது இந்தியாவின் நன்கு வளமான உயிரியல் பல்லுயிர்த் தன்மையை ஆவணப் படுத்தச் செய்வதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு குறிப்பிட்டப் பகுதி அல்லது ஒரு கிராமத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகை உள்ளிட்ட உள்ளூரில் கிடைக்கும் உயிரியல் சார் வளங்களின் விரிவான பதிவாக இது விளங்குகிறது.
இது பல்லுயிர்த்தன்மை மேலாண்மைக் குழுக்களால் (2002 ஆம் ஆண்டு பல்லுயிர்ச் சட்டத்தின் கீழ்) உள்ளூர்ச் சமூகங்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப் படுகிறது.