இந்திய அரசாங்கமானது, சஞ்சார் சாதி இணைய தளம் எனப்படும் இந்திய அளவிலான மத்தியச் சாதனங்கள் அடையாளப் பதிவுக் கண்காணிப்பு அமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
சஞ்சார் சாதி இணைய தளமானது, தொலைத் தொடர்புத் துறையின் ஒரு முன்னெடுப்பு ஆகும்.
இது கைபேசி சந்தாதாரர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலமும், அரசாங்க முயற்சிகள் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் அவர்களுக்கான அதிகார வழங்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இணைய தளமானது, மத்தியச் சாதனங்கள் அடையாளப் பதிவுக் கண்காணிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
இது இந்தியா முழுவதும் உள்ள திறன்பேசி பயனர்கள் தொலைந்து போன அல்லது திருடப் பட்ட தமது கைபேசிகளின் பயன்பாட்டினை முடக்கச் செய்யவும் அவற்றின் பயன்பாட்டுத் தடமறிந்து அதனைக் கண்காணிக்கவும் உதவும்.