உள்துறை அமைச்சகமானது ‘2023 ஆம் ஆண்டு மாதிரி சிறைச்சாலைகள் சட்டம்’ என்ற ஒரு சட்டத்தினைத் தயாரித்துள்ளது.
சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலான இந்தச் சட்டமானது சிறைச்சாலை நிர்வாகத்தை நன்கு மாற்றி அமைப்பதற்காக பிரிட்டிஷ் காலச் சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
1894 ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் சட்டம் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இயற்றப் பட்ட, கிட்டத்தட்ட 130 ஆண்டுகள் பழமையானதாகும்.
இதனுடன் தொடர்புடைய மற்ற இரண்டு சட்டங்களான - 1900 ஆம் ஆண்டு கைதிகள் சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டு கைதிகள் இடமாற்றுச் சட்டம் - ஆகியவையும் பல்லாண்டுகள் பழமையானவையாகும்.
நாட்டில் உள்ள சிறைகளும், ‘அதில் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களும்’ இந்திய அரசியலமைப்பின் படி மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு கூறாகும்.
மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பிரதேச நிர்வாகங்கள் இந்தச் சட்டத்தினைத் தமது தேவைகளுக்கு ஏற்ற வகையிலான மாற்றங்களுடன் தங்களது அதிகார வரம்பிற்குள் ஏற்றுக் கொள்ளலாம்.