கேரளாவின் திருவனந்தபுரத்தில் சிறுபான்மை மீனவக் குடும்பங்களை மேம்படுத்துவதற்காக மத்ஸ்ய சக்தி திட்டம் தொடங்கப்பட்டது.
இது பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன் (PM VIKAS) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படுகிறது.
இந்தத் திட்டம் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 700 சிறுபான்மை மீனவக் குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு திருவனந்தபுரத்தில் உள்ள சிறுபான்மை மீனவச் சமூகங்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.