TNPSC Thervupettagam

மருத்துவ சாதனப் பூங்காத் திட்டம்

March 23 , 2020 1866 days 549 0
  • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது மருத்துவ சாதனப் பூங்காத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது நாட்டில் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை (உள்நாட்டுஉற்பத்தி)
  • ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மருத்துவ சாதனப் பூங்காக்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
  • ஒவ்வொரு பூங்காவும் ரூ.100 கோடி நிதியைப்  பெற இருக்கின்றது.
  • இந்தப் பூங்காக்கள் மருத்துவச் சோதனைகளின் இறக்குமதியைக் குறைப்பதற்கும் மருத்துவச் சோதனைகளின் தரத்தினை உயர்த்துவதற்கும் உதவ இருக்கின்றன.
  • மேலும் இந்தத் திட்டமானது மருத்துவ உற்பத்திப் பொருட்களின் செலவைக் குறைக்க இருக்கின்றது.
  • ஆசியாவில் மருத்துவச் சாதனங்களுக்கான 4-வது மிகப்பெரியச் சந்தையாக இந்தியா விளங்குகின்றது.
  • இருப்பினும், இந்தியாவில் உள்நாட்டு மருத்துவச் சாதன உற்பத்தித் தொழிற்துறையானது சிறிய அளவிலேயே உள்ளது.
  • இந்தியாவின் உள்நாட்டு மருத்துவச் சாதனங்களானது சர்வதேச தொழிற்துறையில் 2% என்ற அளவில் உள்ளது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்