TNPSC Thervupettagam

மாநிலங்களவையில் முதன்முறையாக சந்தாலி மொழி

December 11 , 2019 2075 days 795 0
  • மாநிலங்களவை தொடங்கிய கடந்த 67 ஆண்டுகளில் தற்பொழுது முதன்முறையாக 'சந்தாலி' மொழி இந்த அவையில் பேசப்பட்டுள்ளது.
  • பாஜக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சரோஜினி ஹெம்ப்ரம் என்பவர் பழங்குடியினச் சமூகமான சந்தாலர்களின் மொழியில் மாநிலங்களவையில் பேசினார்.
  • சுழிய நேரக் கேள்வி - பதில்களை (குறிப்புகளை) அதிகப்படுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துமாறு இந்த அவையின் தலைவரான எம்.வெங்கையா நாயுடு ஊக்குவித்துள்ளார்
  • இதன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிபெயர்ப்புகள் மற்ற உறுப்பினர்களுக்கு தலையணி கேட்பொறியின் மூலம் கிடைப்பதை இவர் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்