TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத் திறன் – உணவுப் பொருள் வழங்கல் அட்டை

October 5 , 2019 2130 days 733 0
  • 2020 ஆம் ஆண்டு ஜூன் 1க்குள் நாடு முழுவதும் “ஒரே தேசம் ஒரே உணவுப் பொருள் வழங்கல் அட்டையை” செயல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பின்வரும் மாநிலங்களுக்கிடையே உணவுப் பொருள் வழங்கல் அட்டையின் பெயர்வுத்திறனை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
    • ராஜஸ்தான்/ ஹரியானா
    • தெலுங்கானா - ஆந்திரா
    • மஹாராஷ்டிரா – குஜராத்
  • இது ராஜஸ்தான்/ஹரியானா, தெலுங்கானா/மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா/குஜராத்தில் வசிக்கும் பயனாளிகள் தங்கள் மாநிலத்தில் உள்ள பொது விநியோக முறையின் கீழ் தங்களது உணவுப் பொருட்களை மேற்கூறிய ஏதேனும் ஒரு  மாநிலத்தில் பெற்றுக் கொள்வதைக் குறியிட்டுக் காட்டுகின்றது.
  • மாநிலங்களுக்கு இடையேயான பெயர்வுத் திறன் திட்டமானது மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் என்பவரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்