முதலாவது சர்வதேசப் புலம்பெயர்வு மதிப்பீட்டு மன்றம்
May 20 , 2022 1419 days 692 0
முதலாவது சர்வதேசப் புலம்பெயர்வு மதிப்பீட்டு மன்றமானது ஐக்கிய நாடுகள் பொது சபையின் சார்பில் நடைபெற உள்ளது.
பாதுகாப்பான, முறையான மற்றும் ஒழுங்கான புலம்பெயர்வுக்கான உலகளாவிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் உள்ளாட்சி, தேசிய, பிராந்திய மற்றும் உலக அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான முதன்மையான அரசுகளுக்கிடையேயான உலகளாவிய தளமாக இது செயல்படும்.
இது நான்கு தகவல் பரிமாற்றப் பல்நாட்டு பங்குதாரர்கள் வட்ட மேசை மாநாடு, ஒரு கொள்கை உரையாடல் மற்றும் ஒரு முழு அளவிலான கூட்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.