முன்கூட்டிய பணம் செலுத்து முறைகளை ஆராய்வதற்கான குழு
February 4 , 2019 2373 days 704 0
மத்திய மின்சார ஆணையத்தின் கீழ் அரசு மாநில மின் விநியோக நிறுவனங்கள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படும் முன்கூட்டிய பணம் செலுத்து அமைப்புகளை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்த குழு தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மின் பகிர்மான நிறுவனங்களின் தலைவர்களையும் மத்திய மின் அமைச்சகம் மற்றும் மின்சாரக் கழகங்களில் இருந்து பிரதிநிதிகளையும் கொண்டிருக்கும்.
இது மின் பகிர்மான நிறுவனங்களிடமிருந்து மின் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படும் தாமதிக்கப்பட்ட பணமளிப்புகள் தொடர்பான விவகாரங்களை சரிசெய்திடும்.