இந்தியாவானது, மேகாலயாவின் உயிர்வாழும் வேர்ப் பாலங்களை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 2026-27 உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்ப்பதற்காகப் பரிந்துரைத்துள்ளது.
உயிர்வாழும் வேர்ப் பாலங்கள் என்பவை, ரப்பர் அத்தி மரங்களின் வேர்களை ஆறுகள் மற்றும் நீரோடைகளின் குறுக்கே வளரச் செய்து உருவாக்கப்படும் இயற்கையான பாலங்கள் ஆகும்.
இந்தப் பாலங்கள் பாரம்பரியமாக மேகாலயாவின் காசி மற்றும் ஜெயிந்தியா சமூகத்தினரால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
இவை முக்கியமாக காசி மற்றும் ஜெயிந்தியா மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன; இதில் புகழ்பெற்ற இரட்டை அடுக்கு வேர்ப் பாலம் அமைந்துள்ள நோங்ரியட் கிராமமும் அடங்கும்.