TNPSC Thervupettagam

மேற்குப் பிராந்தியத்திற்கான பிரத்தியேக சரக்குத் தடம்

January 11 , 2021 1618 days 712 0
  • மேற்குப் பிராந்தியத்திற்கான பிரத்தியேக சரக்குத் தடத்தின் 306 கி.மீ நீளமுள்ள புதிய ரெவாரி - புதிய மதார் என்ற பிரிவை பிரதமர் திறந்து வைத்தார்.
  • இந்தப் புதிய பாதையானது ராஜஸ்தானின் மதார் மற்றும் ஹரியானாவின் ரெவாரி பகுதிகளுக்கு இடையேயான வணிக நடவடிக்கைகளுக்காகப்  பயன்படும்.
  • இந்த நிகழ்வின் போது, 1.5 கி.மீ நீளமுள்ள உலகின் முதல் இரட்டை அடுக்கு கொண்ட சரக்குப் பெட்டக இரயிலையும் பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்தார்.
  • இது ஹரியானாவின் அட்டெலி முதல் ராஜஸ்தானின் கிஷன்கர் வரை மின்சார இழுவை மூலம் இயக்கப் படுகிறது.
  • மேற்குப் பிராந்தியத்திற்கான பிரத்தியேக சரக்குத் தடமானது உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி முதல் மகாராஷ்டிராவின் மும்பை வரை செல்கிறது.
  • இந்தப் பாதையானது உத்தரப் பிரதேசம், தில்லி தேசிய தலைநகரப் பகுதி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக செல்கிறது.
  • மேற்குப்  பிராந்தியத்திற்கான பிரத்தியேக சரக்குத் தடமானது உத்தரப் பிரதேசத்தின் குர்ஜாவில் கிழக்குப் பிராந்தியத்திற்கான பிரத்தியேக சரக்குத் தடத்தைச் சந்திக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்