சமீபத்தில் இந்திய அரசானது வரைவு ஆர்க்டிக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி மையமானது ஆர்க்டிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு தலைமை நிறுவனமாகச் செயல்பட உள்ளது.
இந்தக் கொள்கையானது ஆர்க்டிக்கில் வசிப்பவர்களை, அதிலும் குறிப்பாக அங்கு வாழும் சமூகத்தினரை இமயமலைப் பகுதிகளில் வாழ்பவர்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆர்க்டிக் பகுதியின் வளங்கள் ஆய்வு செய்யப் பட்டு, அவை நீடித்த அளவில் பயன்படுத்தப் படுவதை இந்தக் கொள்கையானது உறுதி செய்கின்றது.
இந்தக் கொள்கையின்கீழ், இந்தியாவானது ஆர்க்டிக் ஆணையத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்படுவதை உறுதி செய்கின்றது.
இந்தியாவானது 2013 ஆம் ஆண்டில் ஆர்க்டிக் ஆணையத்தில் பார்வையாளர் நாடு என்ற தகுதியினைப் பெற்றது.
இந்தியாவின் பார்வையாளர் நாடு என்ற தகுதிநிலையானது 2018 ஆம் ஆண்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இந்தியாவானது 1920 ஆம் ஆண்டில் ஸ்வால்பேர்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டில் இந்தியாவானது நார்வேயின் ஸ்வால்பேர்டின் நை ஆல்சந்த் என்ற இடத்தில் ”ஹிமாத்ரி” எனப்படும் ஆராய்ச்சித் தளத்தை ஏற்படுத்தியுள்ளது.