TNPSC Thervupettagam

ரங்கீன் மச்லி திட்டம் 2031

September 5 , 2026 8 days 88 0
  • குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் லட்சத்தீவின் அகத்தியில் அலங்கார மீன்வள மேம்பாட்டிற்கான ஒரு உத்திசார் செயல் திட்டமான ரங்கீன் மச்லி திட்டம் 2031'-ஐ வெளியிட்டார்.
  • இந்தியாவின் அலங்கார மீன்வளத்துறையை ஒழுங்கமைக்கவும், அறிவியல் பூர்வமாக மேம்படுத்தவும் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் மீன்வளத் துறையால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இது இனப்பெருக்கம், குஞ்சுப்பொறிப்பகங்கள், உற்பத்தி, தனிமைப்படுத்துதல், நோய் மேலாண்மை, சான்றிதழ், போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட முழுமையான விநியோகச் சங்கிலியை உள்ளடக்கியது.
  • அலங்கார மீன் தொழில் முழுவதும் சீரான செயல்பாட்டு நடைமுறைகள், தர உத்தரவாதம், உயிரியல் பாதுகாப்பு மற்றும் தடமறிதல் தரநிலைகளை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் திறன்கள், தயாரிப்புகளின் தரம் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்தி, இத்துறையை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும்.
  • லட்சத்தீவு ஒரு பிரத்யேக கடற்பாசி தொகுப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் அதன் கடல் வளங்கள் அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் அதிக மதிப்புடைய பிற மீன்வள நடவடிக்கைகளுக்கும் ஏற்றதாகக் கருதப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்