ரசாசா ஏரி ஆனது, ஈராக் நாட்டின் ஆளுகைக்குட்பட்ட அன்பர் மற்றும் கர்பாலா ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு ஏரியாகும்.
இது மில்ஹ் ஏரி எனவும் அழைக்கப்படுகிறது.
இது ஈராக் நாட்டின் 2வது மிகப்பெரிய ஏரியாகும்.
யூப்ரடீஸ் ஏரியில் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தச் செய்வதற்கும், பாசன நோக்கங்களுக்கான ஒரு பெரிய நீர்த்தேக்கமாக இதனைப் பயன்படுத்துவதற்கும் வேண்டி இந்த ஏரியானது கட்டப்பட்டது.
தற்போது இந்த ஏரியின் நீர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நீர்நிலை குறைந்து வருகிறது.
மேலும் இது மாசுபடுதலாலும் அதிகளவு உப்புத்தன்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளது.